Last Updated : 10 Oct, 2015 09:50 AM

 

Published : 10 Oct 2015 09:50 AM
Last Updated : 10 Oct 2015 09:50 AM

பெருமை .. சிறுமை .. பொலிவியா - 2

அரசியலமைப்பு சட்டத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற வேண்டுகோளுடன் ஆயிரக்கணக் கான பொலிவிய மக்கள் தங்கள் நாடாளுமன்றத்தை நோக்கி சமீபத் தில் ஊர்வலமாகச் சென்றார்கள்.

இப்படிக் கலந்து கொண்டவர் களில் பொதுமக்கள், தொழிற்சங்க வாதிகள், சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என்று எல்லோருமே உண்டு.

இந்த ஒருங்கிணைப்பே கொஞ்சம் வித்தியாசமானதுதான். இவர்களின் வேண்டுகோள் என்ன?

பொலிவியாவின் அரசியல மைப்புச் சட்டத்தின் 168-வது பிரிவு அந்த நாட்டின் அதிபரோ, துணை அதிபரோ அதிகபட்சம் இரண்டு முறைதான் அந்தப் பதவியில் வகிக்க முடியும். இப்போது அந்தப் பதவியை வகிப்பவர்கள் இரண்டாம் முறையாக அந்தப் பதவிகளில் இருக்கிறார்கள் (அது இரண்டாவதா மூன்றாவதா என்பதில் கூட ஒரு சிக்கல் உண்டு. அதைப் பிறகு பார்ப்போம்).

இந்த அரசியலமைப்பு சட்டப் பிரிவை நீக்க வேண்டும் என்பதற் காகதான் அந்த ஊர்வலம்.

இது கொஞ்சம் முரணாகத் தெரி கிறது இல்லையா? ஒருவர் இருமுறைக்கு மேல் பதவி வகிக்கக் கூடாது என்பது நல்லதுதானே? தொடர்ந்து அதிகார போதை என்பது பலவிதக் குற்றங்களைச் செய்யதானே வழிவகுக்கும்? தவிர புதியவர்கள் பதவிகளில் அமர்ந் தால்தானே துடிப்புடன் புதிய மாற்றங்கள் நடைபெறும்? அப்படியிருக்க இதற்கு எதிராக ஓர் ஊர்வலமா?

ஊர்வலத்தின் பின்னணி இதுதான். இப்போது அந்த நாட்டின் அதிபராக இருக்கும் மொரேல்ஸின் ஆட்சி அவர்களுக்கு அவ்வளவு பிடித்துவிட்டது. அவர் தொடங்கி வைத்த மாற்றத்திற்கான ஆரம்பம் தொடரவேண்டுமென்றால் அவரே தொடர்ந்து அதிபராக இருந்தால் தான் முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள். அதற்காகத்தான் மேற்படி சட்டப்பிரிவை நீக்க வேண்டுமென்ற கோரிக்கை.

அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவை நீக்க வேண்டும் அல்லது மாற்ற வேண்டுமென்றால் நாடாளு மன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கின் ஒப்புதல் வேண் டும். இதற்கு ஒரு மாற்று உண்டு. வாக்காளர்களில் 20 சதவீதம் பேர் இந்த மாற்றம் வேண்டுமென்று கோரினால் கூட அதை பரிசீலித்தல் கட்டாயம் ஆகும்.

மேற்படி ஊர்வலம் மற்றும் கோரிக்கை காரணமாக அந்த நாட்டின் இரண்டு அவைகளிலும் இந்த விவகாரம் தீவிர விவாதத் துக்கு உட்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகியிருக் கிறது.

அக்டோபர் 2014-ல் (மீண்டும்) பொலிவியாவின் அதிபராகத் தேர்ந் தெடுக்கப்பட்டார் மொரேல்ஸ். அவருக்கு 61 சதவீத நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தது. அவரது அரசுக்கு அந்த நாட்டில் பரவலான ஆதரவு இருக்கிறது. நாட்டின் தேசிய வருமானம் அவரது முந்தைய ஆட்சிக் காலத்தில் அதிகமானது.

ஆக இன்றைய உலகத் தலைவர் களில் மிகப் பிரபலமானவர்களில் ஒருவராக மொரேல்ஸ் விளங்கு கிறார். அதுமட்டுமல்ல தொடர்ந்து மூன்றாவது முறையாக பொலிவி யாவின் அதிபராக இருக்கிறார்.

கொஞ்சம் குழப்பம் வந்திருக் குமே. இரண்டு முறைதானே அந்த நாட்டிற்கு ஒருவர் அதிபராக இருக்க முடியும். இதை மாற்ற வேண்டுமென்றுதானே ஊர்வலமெல்லாம் சென்றதாகக் குறிப்பிட்டோம்!

நியாயம்தான். ஆனால் இதில் ஒரு தந்திரமான விஷயம் நடந்தேறி யது. மொரேல்ஸ் சாமர்த்தியமாகச் செயல்பட்டார். அதாவது இரண் டாவது முறை அதிபராக ஆனவுடன் தான் அடுத்த முறை தேர்தலில் நிற்கலாமா, கூடாதா என்பது குறித்து நீதிமன்றத்தில் ஒரு கேள்வியை முன்வைத்தார். வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

நீதிமன்றம் ஒரு வித்தியாசமான தீர்ப்பை வழங்கியது. ‘‘அரசியல் அமைப்புச் சட்டம் 2009-ல்தான் மாற்றப்பட்டது. அதாவது ஒருவர் அதிபராக இரு பதவி காலங்களுக்கு மேல் இருக்க முடியாது என்பது மொரேல்ஸ் இரண்டாவது முறை அதிபரான பிறகுதான் அமலுக்கு வந்தது. எனவே மொரேல்ஸ் முதல் முறை அதிபராக இருந்த கால கட்டம் இதில் அடங்காது’’ என்றது. அதாவது மீண்டும் ஒரு முறை மொரேல்ஸ் அதிபர் ஆவதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் வழி இருக்கிறது என்று நீதிமன்றமே கூறிவிட்டது.

எதிர்க்கட்சிகள் கொந்தளித் தார்கள். 2005-ல் இருந்து அதிபராக விளங்கும் மொரேல்ஸ், நீதிமன்றத் தையும் தன் கைக்குள் போட்டுக் கொண்டு விட்டார் என்றனர்.

கடந்த 2005 தேர்தலில் வென்று அதிபரானர் மொரேல்ஸ். அவரது முதல் பதவிக்காலம் 2006-ல் தொடங்கி 2011 வரை இருந்திருக்க வேண்டும்.

ஆனால் 2009லேயே அரசியல மைப்பு சட்டத்தை மேலே குறிப் பிட்டபடி மாற்றிவிட்டு பதவி இறங்கினார் மொரேல்ஸ். உடனடி யாக தேர்தலையும் அறிவித்து விட்டார்.

2009-ல் மீண்டும் அவரையே அதிபராக தேர்ந்தெடுத்தனர் மக்கள். அடுத்த பொதுத் தேர்தல் 2014-ல் நடைபெற்றபோது அதில் மீண்டும் மொரேல்ஸ் அதிபர் ஆகலாமா என்று கேள்வி எழுந்தபோதுதான் அந்த நாட்டு நீதிமன்றம் சர்ச்சைக்குரிய அந்தத் தீர்ப்பை வெளியிட்டது.

தேசிய ஐக்கியக் கட்சி என்ற எதிர்க்கட்சியைச் சேர்ந்த தலைவர் சாமுவேல் மெடினா என்பவர் ‘‘அரசியலமைப்பு சட்ட மாற்றம் குறித்து மக்கள் மன்றத்திடம் இவர் கருத்து கேட்டிருக்கலாமே. எதற்காக நீதிமன்றத்தை அணுகினார்? இதிலிருந்தே தெரியவில்லையா இவர் மக்களைச் சந்திக்க பயப்படுகிறார்’’ என்று குறிப்பிட்டார்.

(உலகம் உருளும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x