Published : 12 Oct 2020 05:05 PM
Last Updated : 12 Oct 2020 05:05 PM

கரோனா வைரஸ்; ரூபாய் நோட்டுகளில் 28 நாட்கள்வரை இருக்கும்: ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள்

ரூபாய் நோட்டுகள், பாத்திரங்கள், கண்ணாடி போன்றவற்றில் கரோனா வைரஸ் 28 நாட்கள் கூட இருக்கும் என்று ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட அறிக்கையில், “20 டிகிரி போன்ற வெப்பநிலையிலும் கரோனா வைரஸ் வலுவாக உள்ளது. ரூபாய் நோட்டுகள், கண்ணாடி, பாத்திரங்களில் 28 நாட்கள்வரை கூட கரோனா வைரஸ் இருக்கும். எனவே, கைகளைச் சுத்தப்படுத்த வேண்டும். வைரஸ் பரவும் பொருட்களைத் தூய்மையானதாக வைத்திருக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் சீனாவுக்கு முன்னரே உலகின் பல நாடுகளில் பரவி இருந்ததாகவும், முதலில் நாங்கள்தான் அதுகுறித்துக் கூறினோம் என்றும் சீனா சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்து இருந்தது.

சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலக நாடுகள் அனைத்தையும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில், இதற்கான தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, சீனா உள்ளிட்ட சில நாடுகளில் கரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்டச் சோதனையை நெருங்கியுள்ளன. குறிப்பாக, ரஷ்யாவின் ஸ்புட்னிக் -5 என்ற பெயரிலான தடுப்பு மருந்தை ரஷ்யா அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இவ்வருட இறுதியில் கரோனா தடுப்பு மருந்து கிடைக்கும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x