Published : 07 Oct 2020 09:19 PM
Last Updated : 07 Oct 2020 09:19 PM

ஸ்விட்சர்லாந்தில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா

ஸ்விட்சர்லாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,000 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்பட்டது.

இதுகுறித்து சுவிட்சர்லாந்து சுகாதார அமைப்பு தரப்பில், “ ஸ்விட்சர்லாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,000 பேருக்கு மேல் கரோனா உறுதிப்பட்டது. ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு அதிகபட்சமாக ஸ்விட்சர்லாந்தில் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்விட்சர்லாந்தில் முதல் முறையாக பிப்ரவரி மாதம் கரோனா உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு கரோனா கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு தொற்று கட்டுப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் அங்கு கரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலக நாடுகள் அனைத்தையும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில், இதற்கான தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, சீனா உள்ளிட்ட சில நாடுகளில் இந்தக் கரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்டச் சோதனையை நெருங்கியுள்ளன. குறிப்பாக, ரஷ்யாவின் ஸ்புட்னிக் -5 என்ற பெயரிலான தடுப்பு மருந்தை ரஷ்யா அறிமுகப்படுத்தியுள்ளது.இவ்வருட இறுதியில் கரோனா தடுப்பு மருந்து கிடைக்கும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x