Published : 07 Sep 2015 11:22 AM
Last Updated : 07 Sep 2015 11:22 AM
தென்கொரியாவின் தென்மேற்குப் பகுதியில் மீன்பிடி படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலியாகி இருக்கலாம் என கடலோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.
தென்கொரியாவின் கடல் பகுதியில் மீன்பிடிப்பதற்காக சென்ற டால்பின் என்ற மீன்பிடி படகு சனிக்கிழமை இரவு 7.38-க்கு விபத்தில் சிக்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த கடலோர காவல் படையினர் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நேற்று காலை 6.25 மணிக்கு சுஜா தீவுக்கு அருகே இந்தப் படகு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் பயணம் செய்த 3 பேர் மீட்கப்பட்டனர். மேலும் காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்புக் குழு ஈடுபட்டுள்ளது. சுமார் 10 பேர் பலியாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT