Last Updated : 07 Sep, 2015 11:22 AM

 

Published : 07 Sep 2015 11:22 AM
Last Updated : 07 Sep 2015 11:22 AM

மீன்பிடி படகு கவிழ்ந்து 10 பேர் பலி

தென்கொரியாவின் தென்மேற்குப் பகுதியில் மீன்பிடி படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலியாகி இருக்கலாம் என கடலோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.

தென்கொரியாவின் கடல் பகுதியில் மீன்பிடிப்பதற்காக சென்ற டால்பின் என்ற மீன்பிடி படகு சனிக்கிழமை இரவு 7.38-க்கு விபத்தில் சிக்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த கடலோர காவல் படையினர் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நேற்று காலை 6.25 மணிக்கு சுஜா தீவுக்கு அருகே இந்தப் படகு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் பயணம் செய்த 3 பேர் மீட்கப்பட்டனர். மேலும் காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்புக் குழு ஈடுபட்டுள்ளது. சுமார் 10 பேர் பலியாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x