Last Updated : 04 Sep, 2015 04:03 PM

 

Published : 04 Sep 2015 04:03 PM
Last Updated : 04 Sep 2015 04:03 PM

சிரியா நாட்டு அகதிகளை ஏற்றுக்கொள்ள பிரிட்டன் பிரதமர் ஒப்புதல்

ஐரோப்பாவுக்கு புகலிடம் தேடி மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வருபவர்களை ஜெர்மனி பெருமளவில் ஏற்கும் நிலையில், பிரிட்டன், கிழக்கு ஐரோப்பிய நாடுகள் பல ஏற்றுக் கொள்ள மறுத்து வந்தன.

குறிப்பாக, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், ‘அகதிகளை வரவேற்பதால் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாது’ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், போர்ச்சுக்கல் சென்றுள்ள அவர், கூறும்போது, “நெருக்கடியின் தீவிரத்தை உணர்ந்து மக்களின் துயரத்தை கணக்கில் எடுத்துக் கொண்டு நான் இன்று அறிவிக்கிறேன், ஆயிரக்கணக்கான சிரியா நாட்டு அகதிகளை வரவேற்க முடிவெடுத்துள்ளோம். இன்னும் அதிகமாகக் கூட நாங்கள் செய்வோம். ஏற்கெனவே உள்ள திட்டங்களின் படி ஆயிரம் அகதிகளை முதற்கட்டமாக வரவேற்கிறோம்”

என்று லிஸ்பனில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x