Published : 22 Sep 2015 10:27 AM
Last Updated : 22 Sep 2015 10:27 AM
செல்போனில் தங்களைத் தாங்களே படம் எடுத்து நண்பர் களுடன் பகிர்ந்து கொள்ளும் செல்பி மோகம் உலகம் முழுவதை யும் ஆட்டிப் படைத்து வருகிறது. கடந்த 2013-ம் ஆண்டில் ஸ்மார்ட் போன்களில் செல்பி புகைப் படம் எடுக்கும் கலாச்சாரம் தொற்று நோய் போல பரவியது.
இதன் அடுத்த படியாக, பெரிய குழுவையும் செல்பி புகைப்படம் எடுப்பதற்கு வசதியாக 2014-ல் ‘செல்பி குச்சிகள்’ அறிமுகம் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து பரந்த பரப்பளவில் செல்பி புகைப்படம் எடுக்க வசதியாக ஆளில்லா குட்டி விமானங்கள் அறிமுகமாகின.
அந்த வரிசையில் இப்போது சாப்பிடும்போது செல்பி புகைப்படம் எடுப்பதற்காக செல்பி ஸ்பூன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 76.2 செ.மீ. நீளம் கொண்ட இந்த ஸ்பூனில் செல்போனை பொருத்திவைக்க வசதி உள்ளது. இந்த ஸ்பூனில் ஒவ்வொரு வாய் சாப்பிடும்போதும் செல்பி புகைப்படங்களை சுட்டுத் தள்ளிக் கொண்டே இருக்கலாம்.
அமெரிக்காவை தலைமை யிடமாகக் கொண்டு செயல்படும் ‘சினாமோன் டோஸ்ட் கிரன்ஞ்’ என்ற செரல்ஸ் உணவு உற்பத்தி நிறுவனம் இந்த செல்பி ஸ்பூனை சில நாட்களுக்கு முன்பு அறிமுகம் செய்தது.
இப்போது அந்த நிறுவன இணையதளத்தில் உணவு வகைகளுக்கான ஆர்டரைவிட செல்பி ஸ்பூனுக்கான ஆர்டர்கள் குவிந்து வருவதாகக் கூறப்படு கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT