Published : 08 Sep 2020 02:03 PM
Last Updated : 08 Sep 2020 02:03 PM

எகிப்தில் கரோனா பாதிப்பு 1 லட்சத்தை கடந்தது

எகிப்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து எகிப்து சுகாதார அமைச்சகம் தரப்பில், “ எகிப்தில் கடந்த 24 மணி நேரத்தில் 178 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து எகிப்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1லட்சத்தை தாண்டியுள்ளது. இதுவரை 5, 541 பேர் கரோனாவால் பலியாகி உள்ளனர். சுமார் 79,000 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக முழுவதும் சுமார் 2,7 கோடி பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 லட்சத்துக்கு அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

கரோனா பரவல் ஒரு பக்கம் இருந்தாலும், எகிப்து அரசு பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. விமானச் சேவையும் அங்கு தொடங்கப்பட்டது.

எகிப்து தலைநகர் கெய்ரோவிலும், மற்றொரு முக்கிய நகரமான கிசாவிலும் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனைத் தடுக்கும் நடவடிக்கையில் எகிப்து அரசு ஈடுபட்டுள்ளது.

கருவுற்றிருக்கும் சமயத்தில் பெண்களின் நோய் எதிர்ப்புச் சக்தி சில காரணங்களால் சற்று குறையக்கூடும், அதன் காரணமாக கரோனா தொற்றுக்கு அவர்கள் எளிய இலக்காக மாறக்கூடும் என்பதால் தற்சமயம் கருவுறுதலைப் பெண்கள் தவிர்க்க வேண்டும் என்று எகிப்து சுகாதார அமைச்சகம் ஏற்கெனவே கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x