Published : 02 Sep 2020 02:29 PM
Last Updated : 02 Sep 2020 02:29 PM
இஸ்ரேல் - ஐக்கிய அமீரகம் இடையே சமீபத்தில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த நிலையில் இதற்கு ஆதரவைப் பெறுவதற்காக வெள்ளை மாளிகையின் ஆலோசகர் குஷ்னர் அரபு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இஸ்ரேலுடன் ஒப்பந்தம் செய்து கொள்வதன் மூலம் ஐக்கிய அரபு அமீரகம் இஸ்லாமிய நாடுகளுக்குத் துரோகம் இழைத்துவிட்டது என்று ஈரான் கடுமையாக விமர்சித்து இருந்தது. மேலும், ஐக்கிய அமீரகத்தின் இந்தச் செயலை இஸ்லாமிய நாடுகள் மன்னிக்காது என்றும் ஈரான் தெரிவித்தது. துருக்கி மற்றும் பாலஸ்தீனமும் ஐக்கிய அமீரகத்தின் முடிவை விமர்சித்துள்ளன.
இந்த நிலையில் இஸ்ரேல் - ஐக்கிய அமீரகம் இடையே ஏற்பட்ட இரு நாடுகள் நல்லுறவு தொடர்பான ஒப்பந்தத்திற்கு ஆதரவு பெற சவுதி மற்றும் பஹ்ரைனுக்கு வெள்ளை மாளிகையின் ஆலோசகர் குஷ்னர் செல்ல இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, மத்திய கிழக்குப் பகுதியில் ஆபத்தை விளைவிக்கும் இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே முழு வெளியுறவுத் தொடர்புகளை நிறுவுவதற்கான உடன்படிக்கை சமீபத்தில் ஏற்படுத்தப்பட்டது. இதில் மத்தியஸ்தராக இருந்தது அமெரிக்கா. இது இஸ்ரேலுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம்.
ஏனெனில், பாலஸ்தீனத்துக்கு நாடு என்ற அந்தஸ்து வழங்கும் வரை இஸ்ரேலை அங்கீகரிக்கவோ, அதனுடன் பேச்சுவார்த்தை நடத்தவோ, சமாதான ஒப்பந்தம் செய்துகொள்ளவோ கூடாது என்ற முடிவில் மேற்கு ஆசிய நாடுகள் நீண்டகாலமாக இருந்தன. எனினும், 1979-ல் எகிப்துடனும் 1994-ல் ஜோர்டானுடனும் இஸ்ரேல் தனது முழுமையான வெளியுறவுத் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டது. தற்போதைய உடன்படிக்கை இஸ்ரேலின் வெளியுறவுக்குக் கிடைத்த மூன்றாவது வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT