Published : 08 Sep 2015 12:01 PM Last Updated : 08 Sep 2015 12:01 PM
பேசும் படம்: கவுதமாலா - விரல் நுனியில் மாற்றம்!
கவுதமாலாவின் அதிபராக இருந்த பெரெஸ் மோலினா ஊழலில் ஈடுபட்டதாகக் கூறி பெரும் போராட்டங்கள் வெடித்தன. வேறுவழியின்றி பதவி விலகிய பெரெஸ், தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
ஞாயிற்றுக்கிழமை நடந்த அதிபர் தேர்தலில், தொலைக்காட்சி நகைச்சுவைக் கலைஞர் ஜிம்மி மோரல், தொழிலதிபர் மேனுவல் பால்டிசன் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். 26.5% வாக்குகளுடன் முதலிடத்தில் இருக்கிறார் ஜிம்மி மோரல். எனினும், யாருக்கும் 50% வாக்குகள் கிடைக்கததால், அடுத்த சுற்று தேர்தல் அக்டோபரில் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தலைவிதியை மாற்றும் தேர்தலில் வாக்களித்த பின்னர், கையில் மை வைத்துக்கொள்கிறார் வாக்காளர் ஒருவர்.
WRITE A COMMENT