Published : 19 Aug 2020 10:01 PM
Last Updated : 19 Aug 2020 10:01 PM

சிங்கப்பூரில் 56,031 பேர் கரோனாவால் பாதிப்பு

சிங்கப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் 93 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 6 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள்.

இதுகுறித்து சிங்கப்பூர் ஊடகங்கள் தரப்பில், “ சிங்கப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் 93 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 6 பேர் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள். சிங்கப்பூரில் இதுவரை 56,031 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 27 பேர் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வெளிநாட்டுத் தொழிலாளர்கல் தங்கி இருந்த இடங்கள் அனைத்து கரோனா தொற்று இல்லாத இடங்களாக சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது.

தெற்காசிய நாடுகளிலிருந்து மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிங்கப்பூரில் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் அங்குள்ள தொழிலாளர் விடுதிகளில் தங்கி வேலை செய்து வருகின்றனர்.

மிக நெருக்கமாகக் கட்டப்பட்டு இருக்கும் அத்தகைய விடுதிகளில்தான் அதிக அளவில் கரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. எனவே, விடுதிகளை மையமாக வைத்து சிங்கப்பூர் அரசு மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரமாகச் செய்தது. இதன் காரணமாக தற்போது தொற்று குறைந்துள்ளது.

கரோனா வைரஸுக்கு எதிரான போரை உலக நாடுகள் தீவிரமாக எதிர்கொண்டு வருகின்றன. இன்னும் பல நாடுகளில் ஊரடங்கு, எல்லை மூடல் ஆகியவை தொடர்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x