Published : 13 Aug 2020 01:57 PM
Last Updated : 13 Aug 2020 01:57 PM

பிரேசிலில் ஒரே நாளில் 55,155 பேருக்கு கரோனா தொற்று

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 55 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரேசில் தேசிய சுகாதாரத் துறை தரப்பில், “பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 55,155 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பிரேசிலில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31,64,785 ஆக அதிகரித்துள்ளது. மேலும் புதிதாக 1,175 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர்.

பிரேசிலில் இதுவரை 1,04,201 பேர் கரோனா வைரஸ் பாதிப்பால் பலியாகி உள்ளனர். மேலும், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பிரேசிலில் 52,160 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,274 பேர் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசிலில் கடந்த சில நாட்களாகவே 50,000 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தென் அமெரிக்க நாடுகளில் பிரேசிலும், அர்ஜென்டினாவும் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன என்றும், தென் அமெரிக்காவின் கரோனா மையமாக பிரேசில் இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு முன்னரே தெரிவித்திருந்தது.

சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கரோனா வைரஸ், 8 மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளை முடக்கியுள்ளது. கரோனா வைரஸ் பாதிப்பில் முதல் நான்கு இடங்களில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளன.

கரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி உருவாக்கும் பணியில் பல நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பு மருந்தின் முதல் சுற்றுப் பரிசோதனை முடிவுகள் வெற்றி அடைந்துள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

இந்த நிலையில் ரஷ்யா கரோனாவுக்கு எதிரான ‘முதல்’ வாக்சினைக் கண்டுபிடித்துள்ளதாகவும் தன் மகளுக்கு முதலில் செலுத்தியதாகவும் ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x