Published : 06 Aug 2020 09:27 PM
Last Updated : 06 Aug 2020 09:27 PM

வடகொரியாவில் கரோனா அச்சம்: தனிமைப்படுத்தப்பட்ட மக்கள்

வடகொரியாவின் தென் பகுதியைச் சேர்ந்த நகரம் ஒன்றில் கரோனா பரவல் இருப்பதைத் தொடர்ந்து அங்கு ஆயிரக்கணக்கான மக்களை வடகொரியா அரசு தனிமைப்படுத்தி உள்ளது.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ”வடகொரியாவின் தென் பகுதியில் கரோனா அச்சம் நீடிக்கிறது. இதனைத் தொடர்ந்து அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் துறைமுகத்துக்கு வந்த உணவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன” என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளன.

மேலும் கரோனா பரவலை தடுக்க அதிபர் கிம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக வடகொரியாவின் எல்லைப்பகுதி நகரான கேசாங்கில் கரோனா அறிகுறிகளுடன் ஒருவர் கடந்த ஜூலை மாதம் கண்டுபிடிக்கப்பட்டதால், அந்த நகரின் எல்லைகள் அனைத்தையும் சீல் வைக்கவும், முழு ஊரடங்கு பிறப்பித்தும் அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டார்.

உலகம் முழுவதும் கரோனாவில் பல்வேறு நாடுகள் பாதிப்புக்கு உள்ளாகும் போது வடகொரியாவில் மட்டும் கரோனா நோயாளிகள் குறித்த எந்த பாதிப்பும் வெளியிடப்படாமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது வடகொரியாவில் கரோனா தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x