Published : 27 Jul 2020 08:02 PM
Last Updated : 27 Jul 2020 08:02 PM

இந்தோனேசியாவில் கரோனா பாதிப்பு 1 லட்சத்தைக் கடந்தது

இந்தோனேசியாவில் கரோனா பாதிப்பு ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “இந்தோனேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,525 பேருக்குக் கரோனா நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தோனேசியாவில் கரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,00,303 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கரோனாவுக்கு 4,838 பேர் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு ஆசிய நாடுகளில் இந்தோனேசியா கரோனாவால் அதிகம் பாதிப்பைச் சந்தித்துள்ளது.

சர்வதேச அளவிலான கரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் 2-வது இடத்திலும் உள்ளன. 3-வது இடத்தில் இந்தியாவும், 4-வது இடத்தில் ரஷ்யாவும் உள்ளன.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளின் செயல்பாட்டை முடக்கியுள்ளது. கரோனாவினால் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.

தென் கொரியா, நியூசிலாந்து, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகள் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x