Published : 25 Jul 2020 05:02 PM
Last Updated : 25 Jul 2020 05:02 PM

பாகிஸ்தானை சேர்ந்த 6,500 தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானில் உள்ளனர்: ஐ. நா

பாகிஸ்தானைச் சேர்ந்த 6,500 தீவிரவாதிகள் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையில், “ பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் பலர் தற்போது ஆப்கானிஸ்தானில் உள்ளனர். சுமார் 6000 - 6.500 வரை பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானில் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தெஹ்ரிக் இ தலிபான் அமைபுடன் தொடர்புடையவர்கள். அவர்கள் தொடர்ந்து அங்கு நாச வேளைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது இவர்கள் தலிபான்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளனர்.

இந்த தீவிரவாதிகளால் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இரு நாடுகளுக்கு அச்சுறுத்தல் உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான்கள் இடையே கத்தாரில் நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அதிபர் அஷ்ரப் கனி சம்மதம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

அல்கொய்தா தீவிரவாதிகளுக்குத் தலிபான்கள் அடைக்கலம் கொடுத்ததன் காரணமாக ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டது . 9/11 என்று அழைக்கப்படும் தாக்குதலில் அமெரிக்காவின் பெருமை எனக்கருதப்படும் இரட்டைக் கோபுர வேர்ல்ட் ட்ரேட் செண்டர் கட்டிடத்தை அல்கொய்தா தீவிரவாதிகள் தகர்த்தனர். அதன் பிறகு ஆப்கானுக்கு அமெரிக்கப் படைகள் அனுப்பப்பட்டன. அதன் பிறகான பல மோதல்களில் இதுவரை 2,400 அமெரிக்க வீரர்கள் பலியாகியுள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆப்கன் ராணுவத்தினர், பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவ வேண்டி, அமெரிக்கா, தலிபான் தீவிரவாதிகளுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க சமாதான உடன்படிக்கை தோஹாவில் கையொப்பமானது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x