Published : 22 Jul 2020 06:45 AM
Last Updated : 22 Jul 2020 06:45 AM

சீனா நினைத்திருந்தால் தடுத்திருக்கலாம்: ட்ரம்ப் மீண்டும் புகார்

கடந்த டிசம்பர் மாதம் சீனா வின் வூஹான் நகரில், கரோனா வைரஸ் பரவியது. அதன்பிறகு உலகம் முழுவதும் வைரஸ் பரவி 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவிய தொடங்கிய ஆரம்பத்தில் இருந்தே, அதற்கு காரணம் சீனா தான் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், அதிபர் ட்ரம்ப் நேற்று வெள்ளை மாளிகை யில் உள்ள ஓவல் அலுவலகத் தில் கூறியதாவது:

கரோனா பரவல் விஷயத் தில் சீனா வெளிப்படையாக நடந்து கொள்ளவில்லை. சீனா நினைத்திருந்தால், வெளிநாடு களுக்குப் பரவாமல் தடுத்திருக்க முடியும். ஆனால், வைரஸ் பரவு வதைத் தடுக்க கூடாது என்ற முடிவை சீனா எடுத்திருக்கிறது.

சீனாவின் வூஹான் நகரில் தான் முதலில் கரோனா பரவியது. ஆனால், மற்ற நகரங் களுக்கு பரவ விடாமல் சீனா பார்த்துக் கொண்டது. அதேநேரத் தில் சீனாவை விட்டு உலக நாடு களுக்கு கரோனா பரவ விட்டு விட்டது.

இவ்வாறு ட்ரம்ப் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x