Published : 15 Jul 2020 05:14 PM
Last Updated : 15 Jul 2020 05:14 PM

கரோனா பாதிப்பு: டோக்கியோவில் ரெட் அலர்ட்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கரோனா பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அங்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டோக்கியோ கவர்னர் யுரிக்கோ கொய்கே கூறும்போது, “டோக்கியோவில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர இன்று (புதன்கிழமை) முதல் ரெட் அலர்ட் (அவசர நிலை) விடுக்கப்படுகிறது. குடிமக்களுக்கும் வணிகத்தினருக்கும் எச்சரிக்கை விடுக்கும் சூழ்நிலையில் நாம் இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு டோக்கியோ வாசிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியாவில் உள்ள நாடக அரங்கு ஒன்றில் நாடக உறுப்பினர் ஒருவருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதைத் தொடர்ந்து அந்த நாடக அரங்கங்களில் சமீபநாட்களில் கலந்துகொண்ட பார்வையாளர்கள் அனைவரையும் பரிசோதனை செய்யும் முயற்சியில் அரசு இறங்கியுள்ளது.

ஜப்பானில் 22,220 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 982 பேர் பலியாகியுள்ளனர்.

பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஜப்பானில் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகம் இல்லையென்றாலும், தற்போது புதிதாகத் தொற்று ஏற்படத் தொடங்கியுள்ள நிலையில், ஜப்பான் அரசு தடுப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x