Published : 28 Jun 2020 10:25 AM
Last Updated : 28 Jun 2020 10:25 AM

பாகிஸ்தானில் கரோனா பாதிப்பு 2 லட்சத்தை கடந்தது

பாகிஸ்தானில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,00,000 ஆக அதிகரித்து. இதன் மூலம் கரோனா பாதிப்பு 2 லட்சத்தை கடந்த 12 வது நாடாக பாகிஸ்தான் ஆனது.

இதுகுறித்து பாகிஸ்தான் அதிகாரிகள் தரப்பில், “ பாகிஸ்தானில் கரோனா பாதிப்பு 2,00,000-ஐ கடந்துள்ளது. மேலும் 4,098 பேர் கரோனா வைரஸுக்கு குணமாகி உள்ளனர். கரோனா பாதிக்கப்பட்டவர்களில் 5,000 பேர் சுகாதார பணியாளர்கள்”என்று தெரிவித்துள்ளனர்.

ஏப்ரல் மாத இறுதியில் பொருளாதாரத்தை காரணம் காட்டி பிரதமர் இம்ரான் கான் ஊரடங்கை தளர்த்தியதை உலக சுகாதார அமைப்பு எச்சரித்தது

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு தரப்பில், “ போதுமான நடவடிக்கைகள் இல்லாவிட்டால் ஜூலையில் கரோனா பாதிப்பு இரட்டிப்பாகும்” என்று தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் பாகிஸ்தானில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. பாகிஸ்தானில் சிந்து மற்றும் பஞ்சாப் மாகாணங்கள் கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானைப் பொறுத்தவரை ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில்தான் கரோனா வைரஸ் உச்சத்தை அடையும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தச் சூழலில் ஊரடங்கை அமல்படுத்துமாறு எதிர்க் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

ஆனால் பொருளாதாரத்தை காரணம் காட்டி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தவிர்த்து வருகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x