Published : 23 May 2020 01:20 PM
Last Updated : 23 May 2020 01:20 PM
அமெரிக்காவில் கரோனா நோய்த் தொற்றுக்கு பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவில் கரோனா பலி எண்ணிக்கை 95,000-ஐ தாண்டியுள்ளது.
இதுகுறித்து லண்டனை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் மருத்துவ பல்கலைகழகமான ஜான்ஸ் ஹாப்கின்ஸ் வெளியிட்ட தகவலில், “ அமெரிக்காவில் கரோனா நோய்த் தொற்றுக்கு இதுவரை 95,276 பேர் பலியாகி உள்ளனர். இதில் அதிகபட்சமாக நியூயார்க்கில் மட்டும் 28,743 பேர் பலியாகி உள்ளனர். நியூஜெர்சியில் 10,985 பேர் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கட்டுப்பாடுகளை தளர்த்தி அமெரிக்காவில் உள்ள அனைத்து மாகாணங்களும் இனி வழக்கமாக செயல்படுவதற்கான முயற்சியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈடுபட்டு வருகிறார்.
ஆனால் இது அதிக அளவிலான உயிரிழப்பை ஏற்படுத்தும் என்று அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்காவில் சுமார் 16,45,094 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 4,03,201 பேர் குணமடைந்துள்ளனர்.
உலகம் முழுவதும் சுமார் 53, 06,235 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3, 40,047 பேர் பலியாகி உள்ள நிலையில் 21, 60,156 பேர் குணமடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT