Published : 20 May 2020 06:41 PM
Last Updated : 20 May 2020 06:41 PM
கரோனா வைரஸ் காரணமாக ஆப்பிரிக்காவில் லட்சக்கணக்கான மக்கள் கொடுமையான வறுமைக்குத் தள்ளப்படுவார்கள் என்று ஐ.நா. சபை எச்சரித்துள்ளது.
கரோனா வைரஸ் பாதிப்பு உலக நாடுகளின் பொருளாதாரத்தைப் பின்னோக்கி இழுந்துள்ளது. லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு பறிபோனது. மேலும், பலர் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கரோனா வைரஸ் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் ஆப்பிரிக்காவில் கொடுமையான வறுமை நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் ஆண்டோனியா குத்தரெஸ் கூறும்போது, “ஆப்பிரிக்க நாடுகளில் கரோனா வைரஸ் தொற்று நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் கரோனா வைரஸுக்கு இதுவரை 2,500 பேர் பலியாகியுள்ளனர். நோய்த்தொற்று ஒருபுறம் இருக்க, கரோனா வைரஸ் ஆப்பிரிக்காவின் முன்னேற்றத்தைக் குறைக்கும். லட்சக்கணக்கான மக்கள் கொடுமையான வறுமை நிலைக்கு தள்ளப்படுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
சீனாவிலிருந்து பரவிய கரோனா வைரஸ் 180க்கும் மேற்பட்ட நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கரோனா தொற்றுக்கு ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT