Published : 07 May 2020 08:45 PM
Last Updated : 07 May 2020 08:45 PM
இம்ரான்கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசு, மே 9-ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கைத் தளர்த்த முடிவு செய்துள்ளது.
கரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக பாகிஸ்தான் அரசு அறிவித்திருக்கும் விதிமுறைகளை மிகத் தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பாகிஸ்தான் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஷிபில் ஃபாரஸ் கூறுகையில், ''பொருளாதார நிலையைக் கருத்தில்கொண்டு சிறு வர்த்தகங்கள், போக்குவரத்து மீதான ஊரடங்குக் கட்டுப்பாட்டை மே 9-ம் தேதிக்குப் பிறகு தளர்த்த பிரதமர் இம்ரான்கான் முடிவு செய்துள்ளார். அதேசமயம் கரோனா பரவல் தொடர்பான அரசின் விதிமுறைகளை மக்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். இல்லையென்றால் தொற்று எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எச்சரித்துள்ளார்” என்று தெரிவித்தார்.
பல்வேறு உலக நாடுகளைப் போல பாகிஸ்தானிலும் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. ஊரடங்கினால் கடும் பொருளாதார நெருக்கடியையும் பாகிஸ்தான் சந்தித்து வருகிறது. இந்நிலையில் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கும் தொழில் செயல்பாடுகள் மீதான கட்டுப்பாட்டை பாகிஸ்தான் தளர்த்துகிறது.
பாகிஸ்தானில் இதுவரையில் 24,073 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் 564 பேர் பலியாகியுள்ளனர். 6,464 பேர் குணமடைந்துள்ளனர். குறிப்பாக, பஞ்சாப், சிந்து ஆகிய மாகாணங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT