Published : 07 May 2020 02:23 PM
Last Updated : 07 May 2020 02:23 PM

அமெரிக்காவில் அதிர்ச்சி: கரோனா ஆய்வில் ஈடுபட்ட பேராசிரியர் சுட்டுக் கொலை

அமெரிக்காவில் கரோனா வைரஸ் குறித்த ஆய்வில் ஈடுபட்டிருந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க வாழ் சீனர் பிங் லெய்லு (37). அமெரிக்காவில் உள்ள பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரியும் இவர் கரோனா வைரஸ் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் பிங் கடந்த சனிக்கிழமையன்று பிட்ஸ்பர்க்கில் உள்ள அவரது வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவருக்கு நன்கு அறிமுகமான சாஃப்ட்வேர் பொறியாளர் ஹா ஓ இந்தக் கொலையைச் செய்தார் என்றும், இந்தக் கொலைக்குப் பின்னர் ஹா ஓ தன்னைத் தானே சுட்டுக் கொன்று இறந்ததாகவும் அமெரிக்க போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்தக் கொலை வழக்கு குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரோனா குறித்து ஆய்வு மேற்கொண்ட பேராசிரியர் சுட்டுக் கொல்லப்பட்டது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரோனா வைரஸ் தொடர்பான ஆய்வில் பிங் குறிப்பிட்ட அளவு முன்னேற்றம் கண்டிருந்தார். இதன் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் அவர் சீனர் என்பதால் கொல்லப்பட்டு இருப்பதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சீனாவின் வூஹான் ஆய்வகத்திலிருந்துதான் கரோனா வைரஸ் பரவியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சீனா மீது தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x