Published : 22 Apr 2020 11:05 AM
Last Updated : 22 Apr 2020 11:05 AM

ஈரானில் கரோனா வைரஸ் பலி 5,297 ஆக அதிகரிப்பு

ஈரானில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 5,297 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து ஈரானின் சுகாதாரத் துறை அமைச்சகம் கூறும்போது, “ ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸுக்கு 88 பேர் புதிதாக பலியானதைத் தொடர்ந்து அங்கு கரோனா தொற்றுக்கு பலி எண்ணிக்கை 5,297 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஈரானில் கரோனா தொற்றுக்கு 84,802 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.

மேலும் கரோனா தொற்றை தடுக்கும் சிறைக் கைதிகள் ஆயிரம் பேரை ஈரான் விடுவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் ஈரானில் 1 லட்சம் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா தொற்று காரணமாக கடும் பதிப்பை ஈரான் சந்தித்துள்ள நிலையில் அமெரிக்காவின் பொருளாதாரத் தடை காரணமாக ஈரான் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.

இந்தச் சூழலில் ஈரான் அதன் ஊரடங்கு கட்டுப்பாட்டை பொருளாதார நோக்கில் தளர்த்தியுள்ளது. இன்று ஈரானில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் திறக்கப்பட்டுள்ளன. வணிக வளாகங்கள் செயல்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து பரவிய கரோனா வைரஸ் தொற்று 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவற்றில் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.

25, 57,504 பேர் கரோனா தொற்றால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். 6, 94,881 பேர் குணமடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x