Published : 10 Apr 2020 07:25 PM
Last Updated : 10 Apr 2020 07:25 PM

ஈரானில் கரோனா பாதிப்பு: பலி எண்ணிக்கை 4,232 ஆக அதிகரிப்பு

ஈரானில் கரோனா வைரஸுக்குப் பலியானவர்கள் எண்ணிக்கை 4,232 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து ஈரான் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “ஈரானில் கடந்த 24 மணிநேரத்தில் 1,972 பேர் கரோனா தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஈரானில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68,192 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கரோனா தொற்றுக்குப் பலியானவர்கள் எண்ணிக்கை 4,232 ஆக அதிகரித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் முதலாக கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. ஆனால் தற்போது மத்தியக் கிழக்கு நாடுகளில் கரோனா வைரஸால் அதிகம் பாதித்த நாடாக ஈரான் மாறியுள்ளது.

இதற்கிடையில் அமெரிக்கா அளிக்கவிருந்த மருத்துவ உதவிகளை ஈரானின் மூத்த மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி மறுத்துவிட்டார்.

மேலும், தங்கள் மீதான எண்ணெய் ஏற்றுமதிக்கான பொருளாதாரத் தடையை அமெரிக்கா நீக்க வேண்டும் என்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவத் சாரீப் வலியுறுத்தியுள்ளார்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ், உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளுக்கு மேல் பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஈரான், சீனா ஆகிய நாடுகள் கரோனா வைரஸால் அதிகம் பாதிப்பைச் சந்தித்துள்ளன.

உலகம் முழுவதும் கரோனா வைரஸால் 16 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 95 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x