Published : 01 Apr 2020 02:43 PM
Last Updated : 01 Apr 2020 02:43 PM

கரோனா வைரஸ் பாதிப்பு; இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஏற்பட்ட நெருக்கடி: ஐ.நா. கவலை

கரோனா வைரஸ் தொற்றால் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மோசமான நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக ஐ.நா. பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோன வைரஸ் தொற்றுக்கு அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின்,ஈரான், பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

உலகம் முழுவதும் கோவிட்-19 காய்ச்சலுக்கு சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 42 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.

இத்தாலி, ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகள் கரோனா வைரஸுக்கு அதிகப்படியான உயிரிழப்பைச் சந்தித்துள்ளன. உலக வல்லரசு நாடான அமெரிக்காவில் கரோனா வைரஸுக்கு சுமார் 1,88,578 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 4,000க்கும் அதிகமானவர்கள் அங்கு பலியாகியுள்ளனர்.

இந்த நிலையில் கரோனா வைரஸால் உலக நாடுகள் அடைந்துள்ள பாதிப்புக்கு ஐ.நா. வருத்தம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியா குத்தரெஸ் கூறும்போது, “ உலகம் முழுவதும் கரோனா வைரஸால் 8 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 42 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகினர். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மோசமான நெருக்கடி நிலை கரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்டுள்ளது” என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x