Published : 25 Mar 2020 05:49 PM
Last Updated : 25 Mar 2020 05:49 PM

இங்கிலாந்து இளவரசர் சார்லஸுக்கு கரோனா தொற்று

இங்கிலாந்து இளவரசர் சார்லஸுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கோவிட்-19 (கரோனா வைரஸ்) காய்ச்சல் பரவி வருகிறது. இதன் காரணமாக நோய் பரவலைத் தடுக்க இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளன. இந்த நிலையில் இங்கிலாந்து இளவரசர் சார்லஸுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து இங்கிலாந்து அரசு குடும்பம் சார்பில் கூறும்போது, “இங்கிலாந்து இளவரசர் சார்லஸுக்கு கோவிட்-19 (கரோனா வைரஸ்) காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் அவருக்கு சில அறிகுறிகள் மட்டும் உள்ளன. மற்றபடி நலமாக உள்ளார். அவர் தனிமைப்படுத்தப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுகேவில் சுமார் 8,000க்கும் அதிகமானவர்கள் கோவிட்-19 காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 400க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.

சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், தென்கொரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 பாதிப்பு அதிகமாக உள்ளது.

கரோனா வைரஸுக்கு உலகம் முழுவதும் சுமார் 4 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 18,612 பேர் பலியாகினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x