Published : 24 Mar 2020 03:24 PM
Last Updated : 24 Mar 2020 03:24 PM

இந்தோனேசியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு 686 ஆக அதிகரிப்பு; 55 பேர் பலி

இந்தோனேசியாவில் இன்று மட்டும் 107 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தென் ஆசிய நாடுகளில் இன்று கரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உறுதி செய்யப்பட்ட நாடாக இந்தோனேசியா பதிவாகியுள்ளது.

இதுகுறித்து இந்தோனேசியாவின் சுகாதார அமைச்சகம் கூறும்போது, “இந்தோனேசியாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) 107 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு கோவிட்-19 காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 686 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 7 பேர் கோவிட் காய்ச்சல் பாதிப்பு காரணமாக இன்று பலியாகியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.

இந்தோனேசியாவில் சுமார் 55 பேர் கோவிட் காய்ச்சலுக்குப் பலியாகியுள்ளனர். 30 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சீனாவின் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், தென் கொரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 பாதிப்பு அதிகமாக உள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் உருவான கோவிட் -19 (கரோனா வைரஸுக்கு) காய்ச்சலுக்கு இதுவரை உலக அளவில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x