Published : 22 Mar 2020 06:27 PM
Last Updated : 22 Mar 2020 06:27 PM

ஈரானில் கரோனா வைரஸுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 1,685 ஆக அதிகரிப்பு

ஈரானில் கரோனா வைரஸுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,685 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து ஈரான் சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில், “ஈரானில் கடந்த 24 மணிநேரத்தில் கோவிட் -19 காய்ச்சலுக்கு 129 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து கோவிட் காய்ச்சலுக்கு ஈரானில் பலியானவர்கள் எண்ணிக்கை 1,685 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கோவிட் காய்ச்சலுக்கு ஈரானில் 21,638 பேர் பாதிப்படைந்துள்ளனர். 7,000க்கும் அதிகமானவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் கோவிட் காய்ச்சலால இறப்பு விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் வெள்ளிக்கிழமை வழிபாடுகள் ரத்து செய்யப்பட்டன. பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டுள்ளன. தொடர்ந்து கோவிட் காய்ச்சல் பரவலைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், தென் கொரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 பாதிப்பு அதிகமாக உள்ளது.

கோவிட்-19 காய்ச்சல் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் 3,08,231 பேர் கோவிட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13,000க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x