Published : 16 Mar 2020 01:35 PM
Last Updated : 16 Mar 2020 01:35 PM

ஈரானில் கரோனா வைரஸ் காய்ச்சலுக்கு புதிதாக 113 பேர் பலி; பலி எண்ணிக்கை 724 ஆக அதிகரிப்பு

ஈரானில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு 113 பேர் பலியானதைத் தொடர்ந்து அங்கு கரோனா வைரஸுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 724 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து ஈரான் சுகாதாரத் துறை அமைச்சகம் கூறும்போது, “ஈரானில் கோவிட் காய்ச்சல் பாதிப்புக்கு 113 பேர் பலியாகினர். ஈரானில் கோவிட் காய்ச்சலுக்கு ஒரு நாளில் ஏற்பட்ட அதிகப்பட்ச பலி இதுவாகும். இதன் மூலம் ஈரானில் பலியானவர்களின் எண்ணிக்கை 724 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 14,000 பேர் கோவிட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.

ஈரானில் கோவிட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் 55% பேர் 60 வயதை கடந்தவர்கள். 15% பேர் 40 வயதை கடந்தவர்கள் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட் காய்ச்சல் 19 பாதிப்பு ஈரானில் தீவிரமாக உள்ளது என்றும் இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கு போதிய இடம் இல்லாமல் போகும் என்று அதிகாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

ஈரானில் சுமார் 110,000 மருத்துவமனைகள் உள்ளன. இதில் தலைநகர் தெஹ்ரானில் மட்டும் 30,000 மருத்துவமனைகள் உள்ளன.

ஈரானில் கோவிட்-19 காய்ச்சல் பாதிப்பின் தீவிரம் அதிகமாக இருப்பதைத் தொடர்ந்து அங்கு வெள்ளிக்கிழமை வழிபாடுகள் ரத்து செய்யப்பட்டன. பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டுள்ளன.

தற்போது கோவிட் -19 காய்ச்சல் உலகம் முழுவதும் 112 நாடுகளில் நோய்த் தொற்றை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x