Published : 09 Mar 2020 10:25 AM
Last Updated : 09 Mar 2020 10:25 AM

தென்கொரியாவை அச்சுறுத்தும் கரோனா வைரஸ்

தென்கொரியாவில் கரோனா வைரஸுக்கு இதுவரை 7,300 க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தென்கொரியாவின் நோய் தடுப்பு மையம் தரப்பில் , “தென்கொரியாவில் கோவிட் 19 (கரோனா வைரஸ்) காய்ச்சல் காரணமாக இதுவரை 7,300-க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 24 மணி நேரத்தில் சுமார் 200 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கோவிட் காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட் -19 காய்ச்சல் குணமடைந்து சுமார் 166 பேர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர்.

சீனாவை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 காய்ச்சல் ஈரான், தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது. தைவான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கனடா, கம்போடியா என உலகின் பெரும்பாலான நாடுகளில் கோவிட்-19 காய்ச்சல் பரவியுள்ளது.

சீனாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் பலி எண்ணிக்கை 3,042 ஆக அதிகரித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x