Published : 26 Feb 2020 03:57 PM
Last Updated : 26 Feb 2020 03:57 PM
ஈரானில் கரோனா வைரஸ் குறித்த அதீத அச்சுறுத்தலை அமெரிக்கா ஏற்படுத்துவதாக அந்நாட்டு அதிபர் ஹசன் ரவ்ஹானி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி கூறும்போது, “கரோனா வைரஸ் குறித்த அச்சுறுத்தலை ஈரானில் அமெரிக்கா ஏற்படுத்துகிறது. கரோனா வைரஸ் குறித்த அதீத பயத்தை அமெரிக்கா ஏற்படுத்த அனுமதிக்கக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.
ஈரானின் கோவிட்-19 (கரோனா வைரஸ் ) காய்ச்சல் பாதிப்பின் தீவிரம் அதிகமாகி வருகிறது. சுமார் 95 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கோவிட் -19 (கரோனா வைரஸ் ) காய்ச்சலுக்கு 15 பேர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் ஈரானில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கூடுதலாக இருக்கும் என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனைக் குறிப்பிட்டு கோவிட் -19 (கரோனா வைரஸ்) காய்ச்சல் பாதிப்பின் உண்மை நிலையை உலக நாடுகள் வெளிப்படையாகத் தெரிவிக்குமாறு அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில் இதற்கு தற்போது ஈரான் அதிபர் பதிலளித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT