Published : 18 Feb 2020 01:03 PM
Last Updated : 18 Feb 2020 01:03 PM
சீனாவில் கரோனா வைரஸுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 1,868 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து சீனாவின் தேசிய சுகாதார அமைப்பு செவ்வாய்க்கிழமை கூறும்போது, “சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு கடந்த 24 மணிநேரத்தில் 98 பேர் பலியானதைத் தொடர்ந்து கரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,868 ஆக அதிகரித்துள்ளது.
72,436 பேர் கோவிட்-19 காய்ச்சலால் (கரோனா வைரஸ்) பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 12, 552 பேர் மருத்துவமனையிலிருந்து குணமடைந்து திரும்பியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக, சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹானில் மர்மக் காய்ச்சல் காரணமாக இருவர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டபோது, அவர்களுக்கு கோவிட்-19 (கரோனா வைரஸ்) பாதிப்பு இருந்தது தெரியவந்தது.
சீனா மட்டுமல்லாமல் 20-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் கோவிட்-19 ( கரோனா வைரஸ்) பரவியது கண்டுபிடிக்கப்பட்டது.
தவறவீடாதீர்
ஐக்கிய அமீரகத்தில் 9 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT