Published : 10 Feb 2020 03:40 PM
Last Updated : 10 Feb 2020 03:40 PM
காட்டுத் தீயைத் தொடர்ந்து, கடுமையான மழையை ஆஸ்திரேலியா சந்தித்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் தரப்பில், “ஆஸ்திரேலியாவின் மேற்குப் பகுதியில் கடுமையான காட்டுத் தீ ஏற்பட்ட நிலையில் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. கனமழை காரணமாக கடுமையான வெள்ளப் பெருக்கு குவின்ஸ்லாந்து போன்ற மாகாணங்களில் ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் சிட்னி நகரில் 176 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. கனமழை காரணமாக அணைகள் பல நிரம்பியுள்ளன'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் கடந்த சில மாதங்களாக காட்டுத் தீயினால் ஏற்பட்ட வறட்சியை ஈடு செய்யும் வகையில் பலத்த மழை பெய்து வருவதால் ஆஸ்திரேலிய மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் காடுகள் அடர்ந்த 10 மில்லியன் ஹெக்டேர் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் காட்டுத் தீ ஏற்பட்டது. இதில் 33 பேர் பலியாகினர். கோலா கரடி, கங்காரு உட்பட பல அரியவகை விலங்கினங்கள் பலியாயின. மேலும் 5.5 மில்லியன் ஏக்கர் நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT