Published : 05 Feb 2020 05:04 PM
Last Updated : 05 Feb 2020 05:04 PM

துருக்கி கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து சிரிய படைகள் வெளியேற வேண்டும்: எர்டோகன்

வடக்கு சிரியாவில் துருக்கியின் ஆக்கிரமிப்புப் பகுதியிலிருந்து சிரிய படைகளை வெளியேறுமாறு எர்டோகன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து துருக்கி அதிபர் எர்டோகன் கூறும்போது, “சிரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள துருக்கி கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள சிரிய படைகளை சிரிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். ஒருவேளை சிரிய படைகள் பின்வாங்கவில்லை என்றால், இந்த விவகாரத்தை துருக்கி தனது கையில் எடுக்கும்” என்றார்.

முன்னதாக, சிரியாவில் இட்லிப் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 8 துருக்கி ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டதாக துருக்கி ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் துருக்கி அதிபர் எர்டோகன், சிரியாவின் இட்லிப் பகுதிகளில் துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தும் என்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து துருக்கி ராணுவம் ஞாயிற்றுக்கிழமை சிரியாவுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

துருக்கி எல்லையையொட்டிய சிரியாவில் குர்து போராளிகள் எல்லையோரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்று கூறி அவர்கள் மீது தாக்குதல் நடத்த துருக்கி அதிபர் எர்டோகன் உத்தரவிட்டார்.

அப்பகுதியிலிருந்து அமெரிக்கப் படைகள் தங்கள் படைகளைத் திரும்பப் பெற்றன. இதனைத் தொடர்ந்து சிரியாவில் துருக்கிப் படையினர் குர்து படைகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தினர்.

துருக்கியின் தாக்குதல் காரணமாக சுமார் 4 லட்சம் மக்கள் சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து வெளியேறினர். பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர். இதற்கு உலக அளவில் கண்டனம் எழுந்ததைத் தொடர்ந்து போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

தவறவீடாதீர்!

ஏஜிஎஸ் நிறுவன ரெய்டு: நடிகர் விஜய்யிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் நேரில் விசாரணை

5 ஆண்டுகளில் 320 ஊழல் அதிகாரிகள் நீக்கம்; 7 லட்சம் பணியிடங்கள் காலி: மத்திய அரசு தகவல்

மாணவர்களை அரசியல் கட்சிகள் தூண்டிவிடுகின்றன: ரஜினி விமர்சனத்துக்கு ஸ்டாலின் பதில்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x