Published : 18 Jan 2020 03:08 PM
Last Updated : 18 Jan 2020 03:08 PM

கின்னஸ் சாதனையில் இடம் பிடித்த உலகின் குள்ளமான மனிதர் மரணம்

உலகிலேயே உயரம் குறைவான ஆண் என்று கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ககேந்திர தாபா மாகர் உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 27.

நேபாளத்தைச் சேர்ந்தவர் ககேந்திர தாபா மாகர். இவர் 67.08 செ.மீ. உயரம் கொண்டவர். இதன் காரணமாக உலகின் உயரம் குறைவான உயரம் கொண்ட ஆண் என்று கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தார். இந்நிலையில் நிமோனியா நோயின் காரணமாக அவர் நேற்று உயிரிழந்தார்.

இதுகுறித்து ககேந்திர தாபா மாகரின் சகோதரர் கூறும்போது, “நிமோனியா காரணமாக மாகரின் இதயம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் மரணமடைந்தார்” என்று தெரிவித்தார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு, உலகின் குள்ளமான மனிதர் என்ற சாதனையை ககேந்திர தாபா மாகர் புரிந்தார். அப்போது அவருக்கு வயது 18. பிறகு, நேபாளத்தைச் சேர்ந்த சந்திரா பகதூர் என்பரிடம் 2012-ம் ஆண்டில் மாகர் தனது பட்டத்தை இழந்தார். இந்நிலையில் சில ஆண்டுகளிலே சந்திரா பகதூர் உயிரிழக்க, 2015 ஆம் ஆண்டு மீண்டும் உலகின் குள்ளமான மனிதர் என்ற பட்டம் ககேந்திர தாபாவுக்கு வழங்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x