Published : 08 Jan 2020 05:00 PM
Last Updated : 08 Jan 2020 05:00 PM

180 பயணிகள் பலியான உக்ரைன் விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு

ஈரானிலிருந்து புறப்பட்டு விபத்துக்குள்ளான உக்ரைன் விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டதாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரானின் இமாம் கொமேனி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட உக்ரைன் விமானம் 737-800 இன்று (புதன்கிழமை) தெஹ்ரானின் புறப்பகுதியில் விபத்தில் சிக்கியது. இதனைத் தொடர்ந்து விமானம் தனது தொடர்பை இழந்தது. விபத்துக்குள்ளான விமானத்தில் 180 பேர் பயணம் செய்தனர். விமானத்தில் பயணித்த அனைவரும் பலியாகினர்.

பலியானவர்களில் 147 பேர் ஈரானை சேர்ந்தவர்கள் 32 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.

இந்த நிலையில் விபத்துக்குள்ளான உக்ரைன் விமானத்தின் கருப்புப்பெட்டிக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஈரான் அதிகாரிகள் கூறும்போது, “ இந்த விமான விபத்தில் விமான குழுவின் தவறும் ஏதும் இல்லை, பைலட் ஏதும் தவறும் செய்யவில்லை. விமானத்திலிருந்த அனைத்து ஊழியர்களுக்கு நல்ல அனுபவம் உள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.

விமனம் விபத்துக்குள்ளான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x