Published : 07 Jan 2020 12:34 PM
Last Updated : 07 Jan 2020 12:34 PM

ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம்: ஈரான் வெளியுறவு அமைச்சருக்கு அமெரிக்க விசா மறுப்பு

ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொள்ள ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு அமெரிக்க விசா வழங்க மறுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஐக்கிய நாடுகளில் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ளது. இந்நிலையில் இதில் கலந்து கொள்ள ஈரான் வெளியுறவுத் துறை முகமத் ஜாவத் சாரிஃபுக்கு விசா அமெரிக்கா வழங்க மறுத்ததாக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் இதுகுறித்து கருத்து தெரிவிக்க அமெரிக்கா வெளியுறவுத் துறை மறுத்துவிட்டது.

ஈரானுக்கான ஐநா பிரதிநிதி கூறும்போது, “ ஊடங்களில் இது தொடர்பான செய்தி வெளியாகி உள்ளது. ஆனால் எங்களுக்கு இது தொடர்பாக அமெரிக்காவிடமிருந்து, ஐக்கிய நாடுகள் சபையிடமிருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வரவில்லை” என்று தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் சுலைமான் அமெரிக்கப் படையால் கொல்லப்பட்டது குறித்து, ஐ. நாவுக்கான ஐக்கிய நாடுகள் சபை பிரதி நிதி மஜித் கூறும்போது, ”அமெரிக்க நடத்திய தாக்குதல் தீவிரவாதத்துக்கான எடுத்துகாட்டாகும். கிரிமினல் குற்றமாகும்” என்றார்.

முன்னதாக, பாக்தாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தைக் கடந்த வாரம் ஹிஸ்புல்லா ஆதரவுப் போராட்டக்காரர்கள் சூறையாடினர். அதற்குப் பதிலடியாக ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி காசிம் சுலைமான், ஈராக்கின் ஹஸ் அல் ஷபாபி துணை ராணுவப்படையின் துணைத் தலைவர் அபு மஹதி அல் முஹன்திஸும் உள்பட 8 பேரைக் கடந்த வாரம் பாக்தாத் விமான நிலையத்தில் அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி கொலை செய்தது

இந்தத் தாக்குதல் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவின் பெயரில் தற்காப்பு நடவடிக்கைக்காக எடுத்ததாக அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் தெரிவித்தது. இதன் காரணமாக அமெரிக்கா - ஈரான் இடையே மோதல் வலுத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x