Published : 04 Jan 2020 05:45 PM
Last Updated : 04 Jan 2020 05:45 PM
ஈரானுடன் மோதல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து சுமார் 3,000க்கும் அதிகமான ராணுவ வீரர்களை மத்திய கிழக்குப் பகுதிகளுக்கு அமெரிக்கா அனுப்ப உள்ளது.
ஈரான் ராணுவத் தளபதி சுலைமான் அமெரிக்கப் படையால் கொல்லப்பட்டது முதல் ஈரான் - அமெரிக்கா இடையே மோதல் அதிகரித்து வருகிறது. அமெரிக்கா இதற்காக நிச்சயம் பழிவாங்கப்படும் என்று ஈரான் சபதம் ஏற்றுள்ளது.
பதற்றம் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து மத்திய கிழக்குப் பகுதிகளில் கூடுதல் படைகளை அமெரிக்கா அனுப்பவுள்ளது,
இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் தரப்பில், “அமெரிக்கா மக்களை மிரட்ட ஈரான் திட்டமிட்டிருக்கிறது. எனவே மத்திய கிழக்குப் பகுதிகளில் 3,000 வீரர்கள் கூடுதலாக அனுப்பப்பட உள்ளனர். இது பாதுகாப்புக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணு ஆயுதச் சோதனை தொடர்பான ஒப்பந்தத்தில் விலகியதிலிருந்து ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்து வருகிறது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே விரிசல் அதிகரித்து வந்தது.
இந்நிலையில் பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான், ஈராக்கின் ஹஸ் அல் ஷபாபி துணை ராணுவப் படையின் துணைத் தலைவர் அபு மஹதி அல் முஹன்திஸும் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT