Last Updated : 19 Aug, 2015 04:32 PM

 

Published : 19 Aug 2015 04:32 PM
Last Updated : 19 Aug 2015 04:32 PM

சிரியாவில் ஐ.எஸ். தற்கொலை தாக்குதலுக்கு 13 பேர் பலி

வடகிழக்கு சிரியாவில் குர்திஷ் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியில் இஸ்லாமிக் ஸ்டேட் தற்கொலை தாக்குதல் நடத்தியதில் 13 பேர் பலியானதாக சிரியா சமூக செயல்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குவாமிஷ்லி என்ற ஊரில் குர்தீஷ் போலீஸ் நிலையம் அருகே தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டதாக, பிரிட்டனைச் சேர்ந்த சிரியா மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

சிரியா அரசு செய்தி ஊடகமான சனா, இந்தத் தாக்குதலில் 13 பேர் பலியானதாகவும் 50 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு முதலே, சிரியாவில் குர்திஷ் படையினர் ஐ.எஸ். அமைப்புக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர், அமெரிக்க வான்வழி தாக்குதலின் பயனாக சிரியாவில் ஐ.எஸ். கைப்பற்றிய பகுதிகள் சிலவற்றை குர்தீஷ் படைகள் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x