Published : 18 Dec 2019 06:29 PM
Last Updated : 18 Dec 2019 06:29 PM

ஜப்பான் பிரதமருக்கு நெருக்கமானவர் மீது தொடுத்த 'மீ டு' வழக்கில் பெண் பத்திரிகையாளருக்கு வெற்றி

ஜப்பானில் பிரதமருக்கு நெருக்கமானவர் மீது பத்திரிகையாளர் தொடுத்த 'மீ டு' வழக்கில் அவருக்கு வெற்றி கிடைத்துள்ளது.

உலக அளவில் 'மீ டு' இயக்கம் ஏற்படுவதற்கு முன்னரே ஜப்பானைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஷியோரி இட்டோ என்பவர் ஜப்பான் பிரதமர் ஷின்சே அபேவுக்கு நெருக்கமானவராக அறியப்படும் பத்திரிகையாளர் நோரியுகி யமகுச்சி என்பவர் மீது பலாத்காரப் புகார் கொடுத்தார்.

இவ்வழக்கு ஜப்பானில் பிரதான 'மீ டு' வழக்காக கடந்த சில ஆண்டுகளாகப் பார்க்கப்பட்டு வருகிறது.

2015 ஆம் ஆண்டு நோரியுகி வேலை வாய்ப்பு தொடர்பான ஆலோசனைகக்காக என்னை விருந்துக்கு அழைத்தார். இதில் நோரியால் தான் பலாத்காரம் செய்யப்பட்டதாக ஷியோரி இட்டோ குற்றம் சாட்டினார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக 11 மில்லியன் யென் இழப்பீட்டை நோரியுகி தனக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டை மறுத்த நோரியாகி பதிலுக்கு இட்டோ மீது 130 மில்லியன் யென் இழப்பீடு வழங்க வேண்டும் என வழக்குத் தொடுத்திருந்தார். இந்நிலையில் இவ்வழக்கில் பத்திரிகையாளர் இட்டோ வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு 3.3 மில்லியன் யென் இழப்பீடு வழங்க வேண்டும் என்று டோக்கியோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வெற்றி இட்டோ மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

இதுகுறித்து இட்டோ கூறும்போது, “நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். எதிர்த்தரப்பு தோல்வி அடைந்துள்ளது. உண்மையைக் கூறப்போனால் நான் எப்படி உணர்கிறேன் என்பது எனக்குத் தெரியவில்லை. இந்த வழக்கில் வெற்றி மூலம் நாட்டில் பாலியல் குற்றங்கள் நடைபெறாது என்பது அர்த்தமல்ல. இது முடிவல்ல. இந்த வழக்கின் தீர்ப்பு ஜப்பானில் பாலியல் வழக்குத் தொடர்பான சட்டம் மற்றும் சமூகச் சூழலை மாற்றும் என நம்புகிறேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x