Published : 26 Nov 2019 12:20 PM
Last Updated : 26 Nov 2019 12:20 PM
இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள எந்த நடவடிக்கையிலும் இலங்கை ஈடுபடாது என்று கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச இவ்வார இறுதியில் அரசியல் ரீதியாக இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இந்நிலையில் இந்திய - சீன உறவில் இலங்கையின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கப் போகிறது என்று பத்திரிகையாளர்களுக்கு அவர் பதில் அளித்தார்.
இது தொடர்பாக கோத்தபய ராஜபக்சே கூறுகையில், “இந்தியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள எந்த நடவடிக்கையிலும் இலங்கை ஈடுபடாது. சீனா உடனான எங்கள் உறவு முற்றிலும் வர்த்தகம் சார்ந்தது” என்றார்.
மேலும், இலங்கை - சீனா இடையேயான தெற்கு ஹம்பன்டோட்டா துறைமுக உடன்படிக்கையையும் கோத்தபய ராஜபக்ச விமர்சித்தார்.
இம்மாதம் நடந்த இலங்கை அதிபர் தேர்தலில் சுமார் 54 சதவீதத்துக்கும் மேல் வாக்குகளைப் பெற்று பொதுஜன பெரமுனா கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றார். சுமார் 13 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சஜித் பிரேமதாசவை வெற்றி கொண்டார் கோத்தபய ராஜபக்ச.
இந்நிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், கோத்தபய ராஜபக்ச வரும் 29 ஆம் தேதி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT