Published : 06 Nov 2019 01:06 PM
Last Updated : 06 Nov 2019 01:06 PM

ராஜினாமாவைத் தவிர பிற கோரிக்கைகளை ஏற்கிறேன்: இம்ரான் கான்

ராஜினாமாவைத் தவிர எதிர்க்கட்சிகளின் பிற கோரிக்கைகளை ஏற்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் பாகிஸ்தானின் கடன் சுமை 6 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 30 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக இம்ரான் கான் அரசை எதிர்த்து எதிர்க்கட்சிகள் கடந்த சில மாதங்களாகவே போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.

இதில் கடந்த வாரம் இம்ரான் கான் ஆட்சிக்கு எதிராக ஆசாதி மார்ச் போராட்டத்தை எதிர்க்கட்சிகள் தொடங்கின.

இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். இந்தச் சந்திப்பு செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது. இதில் எதிர்க் கட்சிகளின் ராஜினாமா கோரிக்கையைத் தவிர பிற கோரிக்கைகளை ஏற்பதாக இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர்களுடான இம்ரான் கானின் இந்தச் சந்திப்பு குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் பர்வேஸ் கட்டாக் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார்.

அதில் அவர் கூறுகையில், “எதிர்க்கட்சிகளின் பல முக்கியமான கோரிக்கைகளை அரசு எற்றுக்கொண்டது. ராஜினாமா கோரிக்கையைத் தவிர, மீதமுள்ள கோரிக்கைகள் குறித்து இரு தரப்புத் தலைவர்களும் கலந்தாலோசித்து வருகிறார்கள். பேச்சுவார்த்தை தொடரும்” என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகள் தங்கள் கோரிக்கைகளில் இம்ரான் கானின் ராஜினாமா மற்றும் மறு தேர்தலை முக்கியக் கோரிக்கையாக முன் வைத்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x