Published : 05 Nov 2019 11:31 AM
Last Updated : 05 Nov 2019 11:31 AM

சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆகப் பதிவு

தென் அமெரிக்க நாடான சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆகப் பதிவாகியது.

நிலநடுக்கம் குறித்து அமெரிக்கப் புவியியல் மையம் கூறும்போது, “சிலியின் மத்தியப் பகுதியில் உள்ள கடற்கரைப் பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலி 6.0 ஆகப் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் ஆழம் 30.5 கி.மீ. ஆகும். இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை’’ என்று தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக சில கட்டிடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சிலருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது என்றும் சிலியின் தேசிய பேரிடர் மேலாண்மை தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட அதிர்வுகள் காரணமாக பொதுமக்கள் இடையே பதற்றம் நிலவுவதாக சிலி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த முழு தகவல் இதுவரை வெளிவரவில்லை.

தென் அமெரிக்க நாடான சிலியில் நிலநடுக்க அதிர்வுகள் அடிக்கடி ஏற்படுவது சமீப ஆண்டுகளில் வழக்கமான ஒன்றாகி விட்டது. 2015 ஆம் ஆண்டு சிலியின் இலாபெல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 8.3 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் 13 பேர் உயிரிழந்தனர். சுமார் 10 லட்சம் பேர் இடம்பெயர்ந்தனர். 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.

2018 ஆம் ஆண்டு சிலியில் 8.8 ஆக நிலநடுக்கம் பதிவானது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் 500 பேர் பலியாகினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x