Published : 03 Nov 2019 05:33 PM
Last Updated : 03 Nov 2019 05:33 PM

தெற்காசிய நாடுகளுக்கு சாலை இணைப்பு: ஆங் சாங் சூச்சி -பிரதமர் மோடி சந்திப்பு

பாங்காங்

மியான்மர் தலைவர் ஆங் சாங் சூச்சியை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

இந்தியா-ஆசியான் மாநாடு தாய்லாந்தில் நடைபெறுகிறது. 14-வது கிழக்கு ஆசிய உச்சி மாநாடும் தாய்லாந்தில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 3 நாள் பயணமாகத் தாய்லாந்து சென்றுள்ளார்.

பாங்காக் தேசிய உள்விளையாட்டு அரங்கில் இந்தியர்கள் பங்கேற்கும் கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி நேற்று பங்கேற்று உரையாற்றினார். அப்போது குருநானக்கின் 550-வது பிறந்தநாள் நினைவாக சிறப்பு நாணயம் ஒன்றையும் பிரதமர் மோடி வெளியிட்டார்.

தாய்லாந்து மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலையும் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான இந்தியர்கள், தாய்லாந்திலேயே நிரந்தரமாகக் குடியேறிய இந்திய வம்சாவளியினர் பங்கேற்றனர்.
இந்நிலையில், ஆதித்யா பிர்லா குழுமத்தின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி பாங்காக்கில் இன்று நடந்தது. இதில் பிரதமர் மோடி, தாய்லாந்து நாட்டில் உள்ள ஏராளமான முதலீட்டாளர்கள், நிறுவனங்களின் தலைவர்கள், உலக முதலீட்டாளர்கள் என ஏராளமானோர் பங்கேற்றார்கள்.

இந்தநிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் வழக்கமான, அதிகாரிகள் மட்டத்திலான நிர்வாக முறைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுவிட்டன, முதலீட்டாளர்களுக்கான புதிய உருமாற்றங்களை நோக்கி பயணித்து வருகிறது, இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சரியான நேரம் என்று தாய்லாந்து முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்

இந்த நிகழ்ச்சிகளுக்கு நடுவே மியான்மர் தலைவர் ஆங் சாங் சூச்சியை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்பேது இருதரப்பு உறவுகள் குறித்து விவாதித்தார். குறிப்பாக தெற்காசி நாடுகளை சாலை வழியாக இணைப்பது தொடர்பாக விவாதித்தாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x