Published : 29 Oct 2019 01:16 PM
Last Updated : 29 Oct 2019 01:16 PM

சவுதி மன்னரை சந்திக்கிறார் மோடி 

இரண்டு நாள் அரசுமுறை பயணமாக சவுதி அரேபியா சென்றிருக்கிறார் பிரதமர் மோடி. இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) சவுதி மன்னர் சல்மானை சந்திக்கிறார் மோடி.

இதுகுறித்து ஏஎன்ஐ வெளியிட்ட செய்தியில், “சவுதி மன்னர் சல்மானின் அழைப்பை ஏற்று திங்கட்கிழமை சவுதி சென்றடைந்தார் மோடி. சவுதி சென்றடைந்த இந்திய பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது”கூறப்பட்டுள்ளது.

சவுதி பயணம் குறித்து பிரதமர் மோடி கூறும்போது, “இந்தியாவும் சவுதி அரேபியாவும் பாரம்பரியமான நட்பு ரீதியான உறவுகளை கொண்டுள்ளன. இந்தியாவின் எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய மிக முக்கியமான விநியோகராக சவுதி உள்ளது” என்றார்.

இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) சவுதி மன்னர் சல்மானை மோடி சந்திக்க உள்ளார்.

பிரதமர் மோடியின் சவுதி பயணத்தில் எதிர்கால முதலீடு குறித்த மாநாட்டில் சிறப்பு உரை நிகழ்த்த இருக்கிறார். இதனைத் தொடர்ந்து சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் ஏற்பாடு செய்துள்ள விருந்தில் இந்திய தலைவர்களுடன் பங்கேற்கிறார் மோடி.

2016 ஆம் ஆண்டிற்குப் பிறகு பிரதமர் மோடி வளைகுடா நாடுகளுக்கு மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் இதுவாகும்.


சவுதி இளவரசர் முகமதுபின் சல்மான் 2019 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x