Published : 20 Oct 2019 03:00 PM
Last Updated : 20 Oct 2019 03:00 PM

சிரியாவில் குர்துக்கள் படை பதிலடி: துருக்கி வீரர் பலி

அங்காரா

துருக்கியில் தாக்குதல் நடத்தி வரும் அந்நாட்டு ராணுவத்தினர் மீது சிரயாவின் குர்து போராளிப்படை நடத்திய பதிலடி தாக்குதலில் துருக்கி வீரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் காயமடைந்தார்.

துருக்கி எல்லையையொட்டிய சிரியாவில் குர்து போராளிகள் எல்லையோரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்று கூறி அவர்கள் மீது தாக்குதல் நடத்த துருக்கி அதிபர் எர்டோகன் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து சிரியாவில் துருக்கிப் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

துருக்கியின் தாக்குதல் காரணமாக சுமார் 4 லட்சம் மக்கள் சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர். பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர்.

சிரியாவின் வடக்குப் பகுதியில் குர்து போராளிகளுக்கு எதிராக துருக்கி மேற்கொண்டுள்ள இந்த ராணுவ நடவடிக்கைக்கு இந்தியா உட்பட பல நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

துருக்கியின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து அந்நாட்டின் மீது தடை விதித்து அமெரிக்கா உத்தரவு பிறப்பித்துள்ளது. துருக்கியில் தற்காலிகமாக போர் நிறுத்தம் செய்ய துருக்கி தரப்பு ஒப்புக் கொண்டது.

எனினும் சிரியாவில் குர்து மக்களை குறி வைத்து துருக்கிப்படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்தநிலையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி துருக்கிப்படை தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு குர்து போராளிகளும் பதிலடி கொடுத்தனர். இதில் துருக்கி வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் ஒருவர் காயமடைந்தார். குர்து படை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி செயல்படுவதாக துருக்கி குற்றம்சாட்டியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x