Published : 11 Oct 2019 12:34 PM
Last Updated : 11 Oct 2019 12:34 PM
சிரியாவில் குர்து படைகள் மீதான துருக்கியின் தாக்குதலில் 100க்கும் அதிகமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது குறித்து ஊடகங்கள் தரப்பில், “சிரியாவின் வடக்குப் பகுதியில் குர்து படைகளுக்கு எதிராக துருக்கி இரண்டாவது நாளாக தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது. இதன் காரணமாக சுமார் 10.000க்கும் அதிகமான மக்கள் வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்துள்ளனர். நூற்றுக்கும் அதிகமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் துருக்கி ராணுவ வீரர் ஒருவர் பலியானார். 3 பேர் காயமடைந்தனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குர்து படைகள் மீதான தாக்குதல் குறித்து துருக்கி பாதுகாப்பு அமைச்சகம் கூறும்போது, “குர்து படைகள் மீதான தாக்குதலில் 174 தீவிரவாதிகள் பலியாகினர். ராஸ் அல் ஏன் பகுதியில் அமைந்துள்ள குர்து படைகள் முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 19 குர்து வீரர்கள் பலியாகினர்” என்று தெரிவித்துள்ளது.
துருக்கி -சிரியா எல்லைப் பகுதியில் உள்ள குர்து படைகளை அழிப்பதன் மூலம் எல்லைப் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்று கருதி, குர்து படைகள் மீது ராணுவத் தாக்குதல் நடைபெறும் என்று துருக்கி அதிபர் எர்டோகன் அறிவித்தார்.
சிரியாவில் குர்து படைகளுக்கு ஆதரவு அளித்த அமெரிக்கப் படைகளை வாபஸ் பெறுவதாக ட்ரம்ப் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து துருக்கி தனது தாக்குதலை புதன்கிழமை தொடர்ந்தது. தொடர்ந்து இரண்டாவது நாளாக துருக்கி சிரியாவின் வடக்குப் பகுதியில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பதற்றமான சூழ்நிலையை எதிர் கொண்டுள்ளனர்.
குர்து படைகள் மீதான துருக்கியின் இந்த நடவடிக்கைகளுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT