Published : 04 Sep 2019 06:34 PM
Last Updated : 04 Sep 2019 06:34 PM

கடந்த 4 மாதங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் சிரியாவில் பொதுமக்கள் 1000 பேர் பலி: ஐ.நா

கடந்த நான்கு மாதங்களாக சிரியாவின் வடகிழக்குப் பகுதியில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 1000 பேர் பலியானதாக மிச்செல்லா தெரிவித்துள்ளார்.

கிளர்ச்சியாளர்களுடனான போர் நிறுத்தத்திற்கு சில நாட்களுக்கு முன்னர் அரசுத் தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சில நாட்கள் அங்கு போர் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் கிளர்ச்சியாளர்கள் பகுதியில் அரசுப் படைகள் தாக்குதலைத் தொடர்ந்து வருகின்றனர்.

இதனால் சிரியாவில் உள் நாட்டுப் போர் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இந்த நிலையில் அங்கு அரசுப்படை நடத்தும் தாக்குதலில் பொதுமக்கள் தினந்தோறும் பலியாகி உள்ளனர்.

இதுகுறித்து ஜெனிவாவில் புதன்கிழமை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அமைப்பின் தலைவர் மிக்செல்லா கூறும்போது, “கடந்த ஏப்ரல் மாதம் முதல் சிரியாவின் வடக்குப் பகுதிகளில் வான்வழித் தாக்குதல் நடந்து வருகிறது. இதில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டுப் பகுதிகளான இட்லிம், ஹமாம் மோசமாக பாதிப்படைந்துள்ளது. இந்தத் தாக்குதல்களில் பொதுமக்கள் 1000 பேர் பலியாகி உள்ளனர்” என்றார்.

சிரியாவில் அதிபர் ஆசாத் அரசுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 8 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இதில் ஆசாத் அரசுக்கு ரஷ்யா ஆதரவு அளித்து வருவது குறிப்பிட-த்தக்கது.

இந்த உள்நாட்டுப் போரில் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பலர் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x