Published : 07 Aug 2019 07:58 AM
Last Updated : 07 Aug 2019 07:58 AM
கொழும்பு
காஷ்மீரை, 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, அந்த மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
காஷ்மீரின் லடாக் பகுதியில் 70 சதவீத மக்கள், பவுத்த மதத்தைப் பின்பற்றுகின்றனர். அந்தப் பகுதி தனி மாநிலமாக (யூனியன் பிரதேசம்) மாற்றப்பட்டிருக்கிறது. இதன்மூலம் இந்தியாவில் பவுத்தர்கள் அதிகம் வசிக்கும் மாநிலமாக (யூனியன் பிரதேசம்) லடாக் உருவெடுத்துள்ளது. காஷ்மீரில் இருந்து லடாக்கை பிரித்தது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT