Last Updated : 01 Jun, 2015 08:49 AM

 

Published : 01 Jun 2015 08:49 AM
Last Updated : 01 Jun 2015 08:49 AM

அமெரிக்க துணை அதிபரின் மகன் புற்றுநோயால் மரணம்: நரேந்திர மோடி இரங்கல்

அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடனின் மூத்த மகன் பீவ் பிடன் (46) மூளை புற்று நோயால் இறந்தார்.

தந்தையின் பாதையில் அரசியல் நட்சத்திரமாக வளர்ந்து வந்த பீவ் பிடன், டெலாவேர் மாநிலத்தின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் ஆவார். சமீப காலத்தில் மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர், பெதெஸ்டா என்ற இடத்தில் உள்ள தேசிய ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் இரவு வெளியிட்ட அறிக்கையில் தனது மகன் இறந்த தகவலை துயரத்துடன் தெரிவித்தார். இத்தகவல் அறிந்த பிரதமர் மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x