Published : 10 Jun 2015 11:01 AM
Last Updated : 10 Jun 2015 11:01 AM

மகளின் கூந்தலை வெட்டி இணையத்தில் வெளியிட்ட தந்தை: அவமானத்தால் சிறுமி தற்கொலை

மகளின் கூந்தலை வெட்டிய தந்தை அதை வீடியோ படம் எடுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்தார். இதனால் அவமானமடைந்த அந்த சிறுமி பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

அமெரிக்க தலைநகர் வாஷிங் டனைச் சேர்ந்தவர் இசபெல் (13). அவர் ஏதோ ஒரு தவறு செய்த தற்காக அவரது தந்தை சிறுமியின் நீளமான கூந்தலை வெட்டினார். அதை வீடியோ படம் எடுத்த அவர் யு டியூபில் வெளியிட்டார்.

15 விநாடிகள் ஓடும் அந்த வீடி யோவில் சிறுமி இசபெல்லை அவரது தந்தை கண்டிக்கிறார். அவரது கூந்தல் வெட்டப்பட்டு தரையில் கிடக்கிறது. அதை சுட்டிக் காட்டி பேசும் தந்தை, இனிமேல் தவறு செய்யக்கூடாது, இது ஒரு பாடம் என்று எச்சரிக்கிறார்.

இணையத்தில் வீடியோ வெளி யானதால் அவமானமடைந்த சிறுமி கடந்த மே 30-ம் தேதி தனது பாட்டியுடன் காரில் சென்றபோது திடீரென கீழே இறங்கி மேம்பாலத் தில் இருந்து குதித்தார். கீழே சென்று கொண்டிருந்த ஒரு காரின் பேனட் மீது விழுந்த அவர் பலத்த காயமடைந்தார்.

உடனடியாக அவர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அடுத்த நாளே அவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அமெரிக்கா முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி யுள்ளது.

சிறுமியின் தந்தை மீது இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறிய போது, முதல்கட்ட விசாரணையில் சிறுமியை அவரது குடும்பத்தினர் துன்புறுத்தவில்லை என்று தெரி கிறது, அவர் மனஉளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.

சிறுமியின் குடும்பத்தினர் இணையத்தில் வீடியோவை வெளியிடவில்லை. யாரோ ஒரு மர்ம நபர் வீடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய் துள்ளார் என்று தெரிவித்துள்ளன.

எனினும் இசபெல்லின் தந்தை மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக் கப்பட வேண்டும் என்று வலி யுறுத்தி பெரும்பாலானோர் குரல் எழுப்பியுள்ளனர்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x